Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீகாளஹஸ்தி: பங்காருபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா தலைமையில் போலீசார் பங்காருபாளையம் மண்டலம் மிட்டப்பள்ளி அருகில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பலமநேரில் இருந்து சித்தூரை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனைச் செய்தனர்.
அதில் 1,200 கர்நாடக மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட பெருமால்லகுடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 30), சித்தூரைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சித்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர் தப்பியோடி விட்டார். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருடன், மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.